Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:50:13 PM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameHameed Sirajudeen
PlaceVillupuram
Approved Comments16
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
16
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
எழுத்து மேடை: DCWவுக்கு குஜராத் பூகம்பம் ஓர் நினைவூட்டல்! [ஆக்கம் - அன்பின் அலாவுதீன்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Hameed Sirajudeen (Villupuram) [14 March 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 33706

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமதூருக்கு தேவையான
மிக நல்லதொரு பதிவு...

குஜராத் 'மோடி' மஸ்தானின் தேர்தல் சூட்டில் நாடே காற்று வாங்கி வரும் இந்த வேளையில், காயலம்பதியினர் சுவாசிக்கும் காற்று மாசு பட்டு வருகிறது என்பதை குஜராத் பூகம்பம் மூலமாக தெளிவு படுத்தும் இந்த கட்டுரை நமக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. இது போன்ற கட்டுரைகள் தான் நமது தேவையை நமக்கே எடுத்து காட்டுகிறது. ஊடகங்களும் இது போன்ற கட்டுரைகளை அதிகம் வெளியிட வேண்டும்.

கல்வியை தருவது அரசாங்கத்தின் கடமை. ஆனால், அந்த கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து விட்டு சாராயத்தை காய்ச்ச போய்விட்ட அரசாங்கத்திற்கு நமது பிரச்சனை கண்ணில் படாது. நாம் தான் அதை தெரிய வைக்க வேண்டும். ஊடகங்கள் தான் அந்த வேலையை கையில் எடுத்து போராட வேண்டும். அதனால் தான் ஊடகங்களை ஒரு நாட்டின் நான்காவது தூணாக சித்தரிக்கின்றனர்.

ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளில் சிக்கி தவிக்கும் நாடுகளில் கூட ஊடகங்கள் மனது வைத்ததால் பிரச்சனைகள் தீர்ந்த வரலாறு நிறைய உள்ளது. நமது நாட்டை பொறுத்தவரை ஊடகங்களின் சக்தி வீணாகி வருகிறது.

நம்மை பொறுத்த வரை நடிகர் நடிகைகளின் வாழ்க்கை வரலாறு அறியவும், அரசியலாளர்களின் அறிக்கை பலத்தை அறியவும் மட்டுமே ஊடகங்களை பயன்படுத்தி வருகிறோம் என்பது வெட்கக்கேடு. இது போன்ற கட்டுரைகளை காண்பதைவிட அந்த மாதிரி படங்களுக்கு வரும் 'லைக்' அதிகமாக இருக்கிறது. ம்ம்ம்ம் என்ன செய்ய?

டி சி டபிள்யு - ஒரு முற்றிய நோய் கிருமி. அதனை அழிப்பது மட்டுமே நமது சுற்றுபுறத்திற்கு நல்லது. ஒரு லட்சம் கையெழுத்து மட்டுமல்ல, கரங்களும் இணைய வேண்டிய வேளை வந்து விட்டது.

சுற்றுசூழல் மாசு விளைவிக்கும் டி சி டபிள்யு இல்லாமல் போக வல்ல ரஹ்மானிடம் கரமேந்துவோம்.

நன்றி! வஸ்ஸாலாம்.

சினேகத்துடன்
சிராஜூதீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளியின் முன்னாள் பொருளாளரும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் மேலாளருமான எம்.ஏ.எஸ்.ஹமீத் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Hameed Sirajudeen (Pondicherry) [13 September 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 22099

இன்னா நில்லாஹி வ இன்னா இலஹி ராஜிஹூன். அன்னாரின் மறு உலக வாழ்க்கையில் வல்ல ரஹ்மானின் அருள் புரிவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: மரணத்தை வெல்ல முடியுமா? மரணம் வரை - சந்தோஷத்தை வெல்வோமே! [ஆக்கம் - அன்பின் அலாவுதீன்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மரணத்தை வெல்ல முடியுமா? ம...
posted by Hameed Sirajudeen (Pondicherry) [01 June 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20799

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பலர்
வாட பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே .....

என்ற பாரதியாரின் வரிகள் நமக்கு பொருந்திவிடுமோ என்று அச்சப்படும் நிலைக்கு தான் நாமெல்லாம் சென்றுக் கொண்டு இருக்கிறோமோ என்ற கவலை கட்டுரை ஆசிரியரின் வரிகளில் ஆதங்கமாக வெளிவருவதை காண்கிறோம்.

“ஒரு கைப்பிடி அளவு உணவு ஒரு மனிதனுக்கு போதுமானது” – என்பது நமக்கு இஸ்லாம் எனும் வெளிச்சத்தை எடுத்தியம்பிய பெருமானார் (ஸல்) அவர்களின் அறிவுரை. நாம் கடைப்பிடிக்கிறோமா என்ன? “தின்று கெட்டான் து...ன்’ என்பது தான் நாம் வாங்கி வைத்திருக்கும் பட்டப்பெயர். அதுவும் நமதூர் ‘கலறிச் சோறு’ என்றால் கறியையும் எண்ணையையும் ஒரு கைப் பார்த்துவிடுகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. கட்டுரை ஆசிரியரின் கவலைகளில் இதுவும் உள்ளது.

டாக்டருக்கு நூற்றுக்கணக்கில் செலவு செய்வதில் நமக்கு தயக்கம் இல்லை. மருந்து மாத்திரைகளில் ஆயிரக்கணக்கில் செலவு செய்வதில் நமக்கு தயக்கம் இல்லை. ஹாஸ்பிடல்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வதில் நமக்கு தயக்கம் இல்லை – ஆனால், ஒரு ஒரு மணி நேரம் நடைப் பயிற்சி செய்வதற்கு நமது மக்கள் தயக்கம் காட்டிவருகிறார்களே என்ற சமூக கவலை கட்டுரையில் மிகுதியாகவே தெரிகிறது.

வல்ல ரகுமானின் கிருபையால், வீரபாண்டிபட்டணம் போகும் வழியிலும், ரத்தினாபுரி போகும் வழியிலும் நமது மக்கள் நடைப்பயிற்சி செய்வதை சமீபகாலமாக பார்க்கிறோம். வரவேற்க வேண்டிய செயல். இது தொடர வேண்டும். வல்லோனைப் பிரார்த்திப்போம்.

சினேகத்துடன்
சிராஜூதீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:முயன்றால் உங்களால் முடியும்! [ஆக்கம் - அன்பின் அலாவுதீன்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:முயன்றால் உங்களால் முடியு...
posted by Hameed Sirajudeen (Pondicherry) [29 April 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 21027

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

முட்டையோடு குஞ்சு வாழ காற்று உள்ளது
முட்டிப்பாரு நீயும் வாழ வாழ்க்கை உள்ளது.
இளமையில் உழைப்பவன் முதுமையில் சிரிக்கிறான்
இளமையில் படுப்பவன் முதுமையில் தவிக்கிறான்
கடலுக்கு பயந்தவன் கரையினில் நிற்கிறான்
அதை படகினில் கடந்தவன் உலகை ஆள்கிறான்.

படிப்போரை உத்வேகப்படுத்தக் கூடிய
கருத்துக்களையும்,
நெஞ்சில் நிறுத்தினால் துள்ளி எழச் செய்யும்
எண்ணங்களையும்,
அருமையான நடையுடன் கூடிய
எழுத்துக்களையும்..
கொண்ட இந்த கட்டுரை பலரை
‘முயற்சித்து முன்னேற’ தூண்டும் என்பதில் ஐயமில்லை.

ஆசிரியரின் இன்னும் பல ஆக்கங்களை
எதிர் நோக்கி காத்திருக்கிறோம்.
தொடரட்டும் அவரது இந்த மகத்தான பணி.

சினேகத்துடன்
சிராஜுதீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அல்ஜாமிஉல் அஸ்ஹர் துணைத்தலைவர் இப்னு ஸஊதின் தாயார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அல்ஜாமிஉல் அஸ்ஹர் துணைத்த...
posted by HAMEED SIRAJUDEEN (Pondicherry) [23 March 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 17838

INNA NILLAAHI WA INNAA ILAIHI RAJIOON.

May The Almighty grand her JANNATHUL FIRDOUS.

My Deepest condolence to her family.

Snaeghathudan
Sirajudeen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:சமூக நலனில் தண்ணீரும் ஒரு முக்கிய பகுதியே! [ஆக்கம் - அன்பின் அலாவுதீன்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:சமூக நலனில் தண்ணீரும் ஒர...
posted by HAMEED SIRAJUDEEN (Pondicherry) [20 March 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20988

அருமையான கட்டுரை....

நம்மில் எத்தனை பேர் இந்த "தண்ணீர் ஆக்கிரமிப்பு" செய்வதில் இருந்து விலகி இருக்கிறோம் என்று உள் நோக்கி உற்று பார்ப்பது மிக முக்கியம்.

மேலும், தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சி எடுப்பதை விட அடி-பைப்பில் அடித்து எடுப்பது நமது உடலுக்கு நல்லது.

கூடுதலாக ஒரு நன்மையையும் உள்ளது. நாம் இப்போதெல்லாம் வீட்டில் உள்ளவர்களோடு கலந்து பேசுவதே இல்லை. இனி அடி-பைப்பில் தண்ணீர் அடித்துக் கொண்டே, உங்கள் மனைவி, தாயார், பிள்ளைகள் அல்லது உங்கள் அன்புக்குரியவர்களுடன் பேசிக் கொண்டே தண்ணீர் அடித்துப் பாருங்கள். பல மன இறுக்கங்கள் அகன்று உடல் நலத்துடன் உள்ளமும் விசாலமாகும்.

வஸ்ஸலாம்

சிநேகத்துடன்
சிராஜுதீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஒரு வேள புது மெதடா இருக்குமோ...? (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஒரு வேள புது மெதடா இருக்க...
posted by HAMEED SIRAJUDEEN (Pondicherry) [17 March 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 17722

முதல்ல பிளாட்பாரத்துல லைட்டு போட சொல்லுங்க அய்யா! புண்ணியமா போகும். சின்னஞ்சிறுசுக ரெயில்வே ஸ்டேஷன் வரவே பயப்படுதுங்க. அதுவும் நம்ம ஊருக்கு வருகிற "செந்தூர்" அந்தி சாய்ந்தப்புரம் தான் வருது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:ஒரு வழி பாதைக்கு மனச் சுவர்கள் தேவையில்லையே! [ஆக்கம் - அன்பின் அலாவுதீன்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஒரு வழி பாதைக்கு மனச் சுவ...
posted by HAMEED SIRAJUDEEN (Pondicherry) [29 February 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20957

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மிகச் சிறந்த, தற்போதைய காயலுக்கு தேவையான ஒரு கட்டுரை.

With a hearty wish for the brothers of our beloved town to become closer. These kinds of thoughts are the must for our town now.

இதை படிக்கும் நாமும் கூட,
இது போன்ற என்ணங்களை வளர்த்துக் கொண்டு,
இவ்வாறான எண்ணங்கள் கொண்ட
அனைவரின் துணை கொண்டு,
பரஸ்பரம் புரிந்து கொள்ள தயங்கிக் கொண்டிருக்கும்
சகோதரர்கள் இணைந்து, மனச் சுவர்களை இடிக்க
முயற்சி செய்ய வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக.
வஸ்ஸலாம்.
சினேகத்துடன்
சிராஜுதீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஒருவழிப்பாதை வழித்தடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகரில் ஆக்கிரமிப்புகளை அக...
posted by HAMEED SIRAJUDEEN (Pondicherry) [27 February 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 17222

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மேலே கமெண்ட் எழுதிய சகோரர்களில் பலர் ஒன்றில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். “தனக்கு வரும் போது தான், தலைவலியும் திருகு வலியும் தெரியும்” – என்பதை நாம் எல்லோருமே மறந்து விடுகிறோம். சரி! அது மனித இயல்பு. ஆனால், போகிற போக்கில் கமெண்ட்களை அள்ளி வீசாமல், தயவு செய்து அடுத்தவர்களின் மனவலிகளையும் சிறிது யோசித்து எழுதியிருக்கலாம்.

நீங்கள் சொல்வதைப் போல், ஆவணங்களும் சான்றுகளும் சரியாக இருந்தால், இடித்த வீட்டை கட்டிக் கொடுத்து விடுவார்களா? வீட்டின் உரிமையாளர் இல்லாத போது, அரசாங்க அதிகாரிகள் வருவார்களாம், நோட்டீஸ் கொடுத்தோம், பதில் இல்லை என்று கூறி வீட்டை இடித்து விடுவார்களாம். அவரது நிலையை யாராவது கணக்கில் எடுத்தார்களா? கிட்டத்தட்ட 25-30 வருடம் பழமையான வீடு அது. இதுவரை எந்த அரசாங்க அதிகாரிக்கும் கண்ணில்படாமல் மறைந்து இருந்ததா?.

20 வருடமாக ஒருவழி பாதை வரவேண்டும் என காயல்பட்டணமே தவம் கிடக்கிறது. இத்தனை வருடமாக எடுக்கப்படாத முயற்சி, சில நாட்களிலேயே எடுக்கப்படுவதைப் பார்த்தால், சகோரதரர் முஜீப் அவர்களின் கருத்தின் கடைசி பாராவில் உள்ள வரிகள் உண்மையாகிவிடுமோ என சந்தேகம் வருகிறது..

கிட்டத்தட்ட இதே வார்த்தைகளில் தான் பெரிய தெருவாசிகளும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என இதே வெப்-சைட்டில் எழுதினார்கள். அப்போது எழுதியதற்கும், இப்போது நீங்கள் எழுதுவதற்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. (இப்போது மீண்டும் முதல் பாராவை படிக்கவும்)

இடிக்கப்பட்ட வீடு, ஸ்தாபனங்களின் உரிமையாளர்கள் அனைவருமே காசு உள்ளவர்களா? (பணம் உள்ளவர்களாக இருந்தாலும், இப்போதுள்ள விலைவாசியில் கட்டுபடியாகுமா? மறுபடியும் கட்ட முடியுமா?)

எல்லாவற்றிற்கும் வல்ல இறைவன் போதுமானவன். வஸ்ஸலாம்

சினேகத்துடன்
சிராஜூதீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: IOB வங்கி கணக்கு 15 இலக்கங்களாக மாற்றம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:IOB வங்கி கணக்கு 15 இலக்க...
posted by HAMEED SIRAJUDEEN (Pondicherry) [25 February 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 17191

சகோதரர்களே!

இந்த நடைமுறை தற்போது வேண்டுமானால் கடினமாக இருக்கலாம், பிற்காலத்தில் வரப்போகும் ஆன்-லைன் முறைக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதை மறந்து விட வேண்டாம். நீங்கள் சொல்வது போன்று டெபாசிட்-செலான் சிறியதாக இருக்கிறது என்பதை ஒற்றுக் கொள்கிறேன். அதை மாற்ற வங்கி நபர்களை நாம் தூண்ட வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
16
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved